tamilnadu

img

மின் கம்பம் சாய்ந்து யானை உயிரிழப்பு

கோவை பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சியூரில் மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு.
கோவை பூச்சியூர் அடுத்த ராவத்தூர் குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு  இன்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை வெகுநேரமாக தோட்டத்தில் சுற்றி திரிந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோட்டத்தில் நின்ற காட்டு யானையை அங்கிருந்து வனத்தை நோக்கி விரட்டினர். பிறகு அரை மணி நேரம் கழித்து அந்தபகுதிக்குள் யானை வந்ததால் அப்பகுதி மக்கள் யானையை விரட்ட ஆரம்பித்தனர் இதனால் காட்டுயானை ஓடியதில் அங்கிருந்த மின்கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் சரிந்து யானை மீது விழுந்தது மின்சாரம் தாக்கியதில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவல் அறிந்ததும் உதவி வன பாதுகாவலர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.யனையின் உடலை மருத்துவர்கள் உடற்க்கூறாய்வு செய்தனர்.
 

;