கனமழை எச்சரிக்கையை மீறி பரளிக்காட்டில் சூழல் சுற்றுலா
வனத்துறை மீது புகார்
மேட்டுப்பாளையம், மே 25– கோவை மாவட்டத்தில் கன மழைக்கான “ரெட் அலர்ட்” எச்ச ரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், மேட் டுப்பாளையம் அருகேயுள்ள பர ளிக்காடு பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப் பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச் சரிக்கை அறிவிப்புபை பொருட் படுத்தாமல், லைஃப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்யவும், ஆற் றில் குளிக்கவும் அனுமதி அளித்த தாக வனத்துறை மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் பவானி யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பரளிக்காடு, அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டு இயற் கையின் எழிலைக் கொஞ்சும் ஓர் இடமாகும். இங்கு 2007 ஆம் ஆண்டு முதல் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து இங்கு வருகை தருகின்ற னர். வனத்தின் நடுவே ஏரி போலக் காட்சியளிக்கும் அணை நீரில் உள் ளூர் படகோட்டிகள் மூலம் நடத்தப் படும் பரிசல் பயணமே இச்சுற்றுலா வின் முக்கிய அம்சமாகும். ரெட் அலர்ட் அலட்சியம் வழக்கமாக சனி, ஞாயிறு மற் றும் பண்டிகை விடுமுறை நாட்க ளில் நடத்தப்படும் இச்சுற்றுலா, ஞாயிறன்று கோவை மாவட்டத் திற்கு வானிலை ஆய்வு மையத் தால் மிக கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட் டது. இருந்தபோதும் ஞாயிற்றுக் கிழமையன்று நூற்றுக்கும் மேற் பட்ட சுற்றுலாப் பயணிகள் பங் கேற்று பரிசல் பயணம் மேற்கொண் டனர். பெருக்கெடுத்து ஓடும் ஆற் றில் எந்தவித பாதுகாப்பு உபகர ணங்களும் இல்லாமல் இறங்கி குளித்தனர். விதிமீறல்கள் பரிசல் பயணம் மேற்கொள் வோர் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டது. மழை பெய்த போதிலும், குடையைப் பிடித் தபடி சுமார் ஐம்பதடி ஆழமுள்ள நீர் தேக்கப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணி யாமல் பயணித்துள்ளனர். மேலும், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதிக்கப்பட்ட தும் விமர்சனத்திற்குள்ளாகியுள் ளது. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை வானிலை மையத்தின் எச்சரிக் கையைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பல் வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். பேரி டர் மீட்புப் படையினர் மேட்டுப் பாளையம் உள்ளிட்ட பகுதிக ளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக் கள் யாரும் ஆற்றின் அருகிலோ, நீர் நிலைகளின் அருகிலோ செல்ல வேண்டாம் என்றும், பவானியாற் றில் குளிக்கவோ அல்லது ஆற் றைக் கடக்கவோ முயற்சிக்க வேண் டாம், ஆற்றங்கரையோரம் நின்று சுயபடம்கூட எடுக்கக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் (மே 24) அறிவிக்கப்பட்டது. இந்நி லையில், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் எச் சரிக்கை அறிவிப்பைப் பொருட்ப டுத்தாமல் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து காரமடை வனச் சரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஏற்க னவே முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்காக சூழல் சுற்றுலா நடத்தப்பட்டது. திங்கட்கிழமை (நாளை) முதல் வனப்பகுதியில் ஆற்றில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரி வித்தனர். வனத்துறையினரின் நேரடி கண்காணிப்பில் நடைபெ றும் இச்சுற்றுலாவில் விதிமுறை கள் மீறப்பட்டதும், ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.