tamilnadu

img

சிறுபான்மை நலக் குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

 

அன்னூர் ஏப்.16-

அன்னூர் பகுதிகளில் 60 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வியாழனன்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் வழங்கினர்.

நாடு முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கோவை மாவட்டம், அன்னூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் 60 குடும்பங்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதில் கோவை மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தலைவர் முகமது முசிர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அகமது கபீர், சத்தியராஜ், பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜமீர் அகமது, மற்றும் இர்பான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.