tamilnadu

img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 12- கொலைவெறி பிடித்த இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து, பாலஸ்தீனத் திற்கு துணை நிற்போம் என்கிற முழக் கத்தை முன்வைத்து மாற்றுத்திறனாளி கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலை வெறி பிடித்த இஸ்ரேல் ராணுவம் போரை நிறுத்த வேண்டும். குழந்தைகள், பெண்கள், அப்பாவி மக் களை கொன்று குவிக்காதே, ஆயுதங்க ளால் தாக்கி நல்ல மனிதர்களை மாற்றுத் திறனாளிகளாக மாற்றாதே போன்ற  முழக்கங்களுடன், பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம் என்று அனைத் துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தினர் ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத் திரம் பேருந்து நிறுத்தம் அருகில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் ப.மாரி முத்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் மாவட்ட அமைப்பாளர் சி.முரு கேசன், சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் வீ.ராஜு, முன்னாள் மாவட்டச் செய லாளர் டி.சுப்பிரமணி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டு உரையாற்றி னார்கள். முடிவில், எம்.ஆனந்தன் நன்றி  கூறினார்.