tamilnadu

img

அமராவதி, திருமூர்த்தி அணை சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த கோரிக்கை

அமராவதி, திருமூர்த்தி அணை சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த கோரிக்கை

உடுமலை, மே 11- அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையின் கரைப்பகுதியில் இருக்கும் பூங்காக்களை முறை யாக பராமரிக்காததால் விஷ பூச்சி கள் தங்கும் இடமாக மாறியுள்ளது.  இதனால் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பய ணிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை  மத்திய பேருந்து நிலையம் பகுதி யிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலை வில், மேற்கு தொடர்சிமலை அடி வார பகுதியில் இருக்கும் அமரா வதி மற்றும் திருமூர்த்தி அணைக ளின் கரைப்பகுதியில், சுற்றுலாப்  பயணிகளை கவரும் வகையில்  பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தற் பொழுது கோடை விடுமுறை என் பதால், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனி டையே, பூங்கா அமைக்கப்பட்ட நாள்  முதல் பராமரிப்பு எதுவும் செய்யாத தால், யாரும் பயன்படுத்த முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பய ணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன்  திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து  சுற்றுலாப் பயணிகள் கூறுகையில்,  திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும்  முக்கியமான சுற்றுலாத் தளமாக  விளங்கும், இந்த அணைப்பகுதி யில் இருக்கும் பூங்காக்களை  முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால், விஷ பூச்சிகள் தாக் கும் அபாயம் உள்ளது. பூங்கா விற்கு செல்ல கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால், முறையாக பரா மரிப்பு செய்யாததால், பூங்கா முழு வதும் குப்பைகள் நிறைந்து காணப் படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை  மாதம், தமிழ்நாடு முதல்வர் உடு மலை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியின் விழாவிற்கு வர உள்ளார் என்ற அறிவிப்பால் அதிக  நிதி ஒதுக்கி, மேற்கண்ட அணை  பூங்காகளில் பராமரிப்பு வேலை  துவங்கப்பட்டது. ஆனால், முதல் வர் வருகை மாற்றப்பட்டதால், அனைத்து வேலைகளும் நிறுத்தப் பட்டுவிட்டன. இதற்காக ஒதுக்கிய  நிதி எங்கே போனது? என்று தெரிய வில்லை. இந்த இரண்டு பூங்காவும் பொதுப்பணித்துறையின் கட்டு பாட்டில் இருப்பதால், அரசு ஒதுக் கிய நிதியில் வேலைகளை செய்ய  வேண்டும். வேலைகளை பாதி யில் நிறுத்தியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்பொழுது திருப்பூர் சுற்றுலாத் துறை அலுவலராக இருக்கும் அர வித்குமார், உடுமலை பகுதியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களில் ஆய்வு செய்தார். ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் இருக்கும் குளங்களை ஆய்வு  செய்து, சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்று வெற்று அறிக்கை தருகிறார். ஏற்கனவே இருக்கும் அணை பூங்காக்களை முறையாக பராமரித்தாலே போதும், என வெறுமையுடன் தெரி வித்தனர்.