tamilnadu

img

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை உடனே வழங்க கோரிக்கை

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை உடனே வழங்க கோரிக்கை

உடுமலை,ஏப்.20- உடுமலை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்காததால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே உடனடியாக ஒன்றிய அரசு  சம்பளப் பாக்கியை தர வேண்டும் என  அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை  அருகே உள்ள சின்ன பாப்பனூத்து  கிராமத்தில், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளை பொறுப்பாளர் சக்திவேல்  தலைமையில் மக்கள் சந்திப்பு  இயக்கம் நடைபெற்றது இதில்,  நான்கு மாதத்திற்கு மேலாக சம்ப ளம் வழங்காததால் நூறு நாள்  வேலை திட்ட தொழிலாளர்கள் கடும்  பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும்,  வேலை  அட்டை வைத்துள்ள அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும்.   ஊரக வேலைத்  திட்டத்திற்கு கூடுதல்  நிதி ஒதுக்க வேண்டும். உடுமலை ஒன்றியத்தில் இருக்கும் சின்ன பாப்ப னூத்து கிராமத்தில் அரசு  நிதி ஒதுக் கீடு செய்தும் இன்னும் கட்டாமல் இருக்கும் பொதுக்கழிப்பிடத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே பகுதியில்  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். குப்பை களை சேகரித்து கொட்டுவதற்கான இடமின்றி தூய்மை பணியாளர்கள் அதிக தொலைவிற்கு கொண்டு  செல்லும் அவல நிலையை போக்கி  பொருத்தமான இடத்தை தேர்வு  செய்ய வேண்டும். ஊராட்சி பணியா ளர் அதிகப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டு என தெரிவித்தனர். இதில்,  விவசாய தொழிலாளர்கள்  சங்கத்தின் உடுமலை செயலா ளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.