வீட்டுமனை பெற்றுக்கொடுத்த சிபிஎம்
சேலம், ஜூன் 23 – தடியடி மற்றும் பொய் வழக்குகளை முறியடித்து வீட்டு மனைப் பட்டா பெற்றுக்கொடுத்த, மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு விளக்கக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற் றது. சேலம் கிழக்கு மாநகரில் காவல்துறையினரின் தடியடி மற் றும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு, நீண்ட போராட்டத் திற்குப் பிறகு பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவை மார்க்சிஸ்ட் கட்சி பெற்றுக்கொடுத்தது. இதுகுறித்த விளக்க கூட்டம் ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாநகரச் செயலாளர் பச்சமுத்து, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆர். வைரமணி, மூத்த தலைவர்கள் ஆர். வெங்கடபதி, பொன். ரமணி, பி. ராம மூர்த்தி, பி. பரமசிவம், ஆர். ராஜி, பி. ரமணி, ஆர். இளங்கேஸ் வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், பச்ச முத்து நன்றி கூறினார். இக்கூட்டத்தில் சேலம் மாநகர 60வது கோட்டம் சுபாஷ் சந்திரபோஸ் நகர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.