கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், மே 29- நாமகிரிப்பேட்டை பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், நாமகி ரிப்பேட்டை பேரூராட்சி, 1 ஆவது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில், 2014 - 15 ஆம் நிதியாண் டில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க ஆணை வழங்கப் பட்டது. சாலை அமைக்கும் பணி நடைபெறவிருந்த நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த சமூக விரோதி கள் சிலர் அப்பணியினை தடுத்து விட்டனர். மேலும், 2019 - 20 ஆம் நிதியாண்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட் டில் கான்கிரீட் சாலை அமைத்திட மீண்டும் பணியணை வழங்கப்பட் டது. மீண்டும் அப்பகுதி சமூக விரோ திகளால் சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. தொடர்ந்து, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக் காக 2019 - 20 ஆம் நிதியாண்டில் 14 ஆவது நிதிக்குழு மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.100 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற் கொண்ட நிலையில், மீண்டும் சமூக விரோதிகளால் பணி தடுத்து நிறுத் தப்பட்டது. இதன் விளைவாக சிறிய மழை பெய்தால் கூட பெரிய குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதும், சேறும் சகதியுமான வீதிகளில் முதியவர்கள், குழந்தைகள் என அடிக்கடி வழுக்கி விழுந்து விபத் துக்குள்ளாவதும் தொடர்கதை யாக உள்ளது. மேலும், தினந்தோறும் சாலை யில் வழிந்தோடும் சாக்கடை நீரால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் கள் ஏற்படுவதும், வாந்தி வயிற்றுப் போக்கு, உள்ளிட்ட உடல் உபாதை கள், தோல் நோய்களால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட பகு தியினை அளவீடு செய்து தரும்படி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ராசிபுரம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்ப டையில் கடந்த பிப்.27 ஆம் தேதி யன்று அளவீடு செய்து அளவு கல் போடப்பட்டுள்ளது. இருப்பினும் மூன்று மாதங்களுக்கு மேலாக சாலை அமைப்பதற்கான எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் புதனன்று பேரூராட்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட் சியின் கிளைச் செயலாளர் எம். பழனிவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.டி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.பி.சபா பதி, மாவட்டக்குழு உறுப்பினரும், தொப்பபட்டி ஊராட்சி மன்ற முன் னாள் துணைத்தலைவருமான குப் பண்ணன் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதையடுத்து பேரூராட்சி துணைத்தலைவர் அன்பழகன், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அதில், சமூக விரோதிகள் சாலை அமைக் கும் போது இடையூறு ஏற்படுத்தி னால், காவல்துறை உதவியோடு சாலை அமைக்கும் பணி நடைபெ றும். சமூக விரோதிகள் மீது தக்க நட வடிக்கை எடுக்கப்படும் வேண்டும், என உறுதியளிக்கப்பட்டது.