tamilnadu

வாழ்வுரிமை கோரிக்கைகளுடன் களத்தில் சிபிஎம்

வாழ்வுரிமை கோரிக்கைகளுடன் களத்தில் சிபிஎம்

கோவை, ஜூன் 19- தமிழக மக்களின் வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம்  முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி இயக்கம் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்துள் ளது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மாநில அரசு கூடுதலான மக்கள் நலத் திட் டங்கள் நிறைவேற்றக் கோரி தமிழகம்  முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்து வரு கின்றனர். அதன் ஒருபகுதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச் சார இயக்கத்தில், சூயஸ் பணிகளுக் காக தோண்டப்பட்ட சாலைகளை உடன டியாக சீரமைக்க வேண்டும். சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். கோவையின் அடையாளமான சிறு குறு தொழிற்துறையை பாதுகாக்க  ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை  உயர்வு போன்றவற்றில் ஒன்றிய அரசு  தலையிட வேண்டும். கோவை நகரத் தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க  உரிய திட்டங்களை தீட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக் குழு சார்பில் மக்கள் சந் திப்பு பிரச்சாரப் பயணம் செக்கான் தோட்டத்தில் ஆரம்பித்து ஏழாம் நம் பர் மெயின் ரோடு, சம்பத் வீதி, சாஸ் திரி வீதி, காமராஜபுரம் உள்ளிட்ட 10  மையங்களில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். வடக்கு நகரக் குழு செயலா ளர் எஸ்.நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ் ணமூர்த்தி, என்.ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்க மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  தொண்டாமுத்தூர் ஒன்றியக் குழு  சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு  இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் வி. மணி தலைமை வகித்தார். வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பய ணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். ஆறுச்சாமி சிறப்புரையாற்றி னார். எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக் குழுவின் சார்பில் கோவை மாநக ராட்சிக்குட்பட்ட 13 மற்றும் 14 வார்டுக ளின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கம் நடைபெற்றது. 13 ஆவது வார்டு  சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதி  தலைமையில் நடைபெற்ற இவ்வியக் கம், உருமாண்டாம்பாளையம், நஞ் சேகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிக ளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆர்.கோபால், 14 ஆவது வார்டு மாமன்ற  உறுப்பினரும், மாவட்ட செயற்குழு  உறுப்பினருமான வி.இராமமூர்த்தி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  தருமபுரி காவிரி உபரிநீர் திட்டம், ஈச்சம்பாடி  அணையிலிருந்து நீரேற்றம் மூலம்  மொரப்பூர் பகுதி ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம், சென்னாக்கல் அணைக் ்கட்டு திட்டம் ஆகியவற்றை உடனடி யாக செயல்படுத்த வேண்டும். கம்பை நல்லூரில் சார் பதிவாளர் அலுவலகம்  அமைக்க வேண்டும். மொரப்பூரில் கூட் டுறவுத்துறை மூலம் சேகோ ஆலை நிறுவ வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கத்தில் ஈடுபட்டனர். தருமபுரி  மாவட்டம், மொரப்பூர் ஒன்றிக்குழு சார் பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே. தங்கராசு தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்  கே.என்.மல்லையன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். ஜடையம்பட்டி யில் துவங்கிய பிரச்சாரம் ஆர்.கோபி நாதம்பட்டி, போளையம்பள்ளி, பொம் மிடி, நவலை, செங்குட்டை, கே.ஈச்சம் பாடி, கம்பைநல்லூர், சாமண்டஅள்ளி, பெரியார் நகர், தொட்டம்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் நடைபெற்றது. சேலம் மாதந்தோறும் மின்சாரம் கணக் கீட்டு முறையை அமல்படுத்த வேண் டும். மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்ட ணம், வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர்  வரி உயர்வுவை திரும்ப பெற வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மேச்சேரி  ஒன்றியத்தில் நடைபயண பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ஜி.மணிமுத்து, பேரூ ராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி உட்பட  பலர் கலந்து கொண்டனர். கோல்கார னூர், எறகுண்டப்பட்டி, காளிக்கவுண்ட னூர், வெள்ளார், ஆட்டுக்காரனூர், சூரி யனூர், சூரியனூர் காலனி, வேங்கா னூர், மல்லியகுந்தம், குப்பக்காளிப் பட்டி, குக்கல்பட்டி ஆகிய கிராமங்க ளில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடை பெற்றது. இதேபோன்று விசைத்தறித் தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை அகற்ற  வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சேலம் தாலுகாக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார  இயக்கம் நடைபெற்றது. நடுவனேரி யில் துவங்கிய பிரச்சாரம் வேம்படிதா ளம், பெருமாள் கோவில் தெரு, சவுண் டம்மன் கோவில் தெரு, இந்திரா நகர், திருவளிப்பட்டி, காகாபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் வடக்கு ஒன்றியம், படைவீடு பேரூ ராட்சி பகுதிகளில் ஒன்றியக்குழு உறுப் பினர் எஸ்.தனசேகரன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றியச் செயலாளர் எஸ். சந்திரமதி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் சி.துரைசாமி, மணிகண்டன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். சாமான்டூர், கவுண்டனூர், ஐசிஎல் உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் நடைபெற்றது.  திருப்பூர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்திற்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் தங்கவடிவேலன் தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்ட னர். கொங்கல்நகரத்தில் துவங்கிய பிரச் சாரம் அண்ணாநகர், வல்லக்குண்டாபு ரம், ராமசந்திராபுரம், நஞ்சேகவுண்டன் புதூர், வீதம்பட்டி, முங்கில்தொழுவு பிரிவு பகுதியில் நடைபெற்று, சிக் கனூத்து பகுதியில் நிறைவு பெற்றது.