தடியடி, பொய் வழக்கு அனைத்தையும் எதிர்கொண்டு தொடர் போராட்டம் மூலம் பட்டா பெற்றுத்தந்த சிபிஎம்
பொதுமக்கள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
சேலம், ஜூன் 13- காவல் துறையினரின் தடியடி, பொய் வழக்கு என அனைத்தையும் தாங்கி, நெடிய போராட்டத்திற்கு பிறகு வீட்டுமனைப்பட்டா பெற்று தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். சேலம் கிழக்கு மாநகரம், சுபாஷ் சந்திரபோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி கடந்த 1997 ஆம் ஆண்டு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் அப் போதைய தலைவர் ஓ.மாணிக்கம் தலைமையில் முதற்கட்ட போராட் டம் நடைபெற்றது. அதன்பின் மார்க் சிஸ்ட் கட்சியின் அன்றைய நகரச் செயலாளராக இருந்த ஆர்.வெங் கடபதி தலைமையில் பட்டா கேட்டு குடிசை போடும் போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, அன் றைய காவல் துணை கண்காணிப் பாளர் பாபு தலைமையிலான போலீ சார் பொதுமக்கள் மீது கடுமை யான தடியடியை நடத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அன்றைய தலை வர்களான பி.தர்மலிங்கம், கந்த சாமி, பி.ராமமூர்த்தி, பி.ரமணி, ராஜி, காசி, பொன்.ரமணி, சுதாகர் ஆகியோர் முன்னின்று போராட் டத்தை வழிநடத்தி சம்பந்தப்பட்ட இடத்திலேயே கொட்டகை அமைத்து வீட்டுமனைகள் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனிடையே, வனத்துறையி னர், காவல்துறையினர் ஒன்று சேர்ந்து பல பொய் வழக்குகளை போட்டு பொதுமக்களை வஞ்சித்து வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தனர். பொதுமக்களின் பிரம்மாண்ட எழுச்சியை தொடர்ந்து, மார்க் சிஸ்ட் கட்சியுடன் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி பரமசிவம் உள்ளிட்ட பலர் போராட் டத்தில் இணைத்தனர். வீறு கொண்டு நடந்த இப்போராட் டத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுபாஷ் சந்திர போஸ் நகர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களால் பெயர் சூட்டப் பட்டு தொடர்ந்து அடிப்படை வசதி களான சாலை, சாக்கடை, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க பல போராட்டங்கள் செய்யப்பட்டு, தற் போது மாநகராட்சியின் ஒரு முக் கிய பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இந்நிலையில், வியாழனன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூ ரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், சுபாஷ் சந்திரபோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 82 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இறுதி வரை தங்களுடன் நின்று வீட்டு மனை பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அப் பகுதி மக்கள் நன்றியை தெரிவித்த னர்.