தொடர் மழையபல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை, மே 26- கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. கோவையில் கடந்த சில நாட்க ளாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி களில் கனமழை பெய்கிறது. இந் நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் சனியன்று இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பேரூர் படித்துறையை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நொய்யல் ஆற்றில் வரும் நீர் கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுக்குளம், செங்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. மேலும் நொய்யல் ஆற் றில் வெள்ளம் காரணமாக பொது மக்கள் யாரும், ஆற்றில் இறங் கவோ, குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புட்டு விக்கி குனியமுத்தூர் ஆகிய தடுப்பணைகள் மழையால் நிரம்பி வழிகிறது. திங்களன்று காலை 8 மணி நில வரப்படி அணையின் நீர் பிடிப்பு பகு திகளில் 120 மில்லி மீட்டர் மழையும், சிறுவாணி அடிவார பகுதியில் 128 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்த அதிகன மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்து உள்ள தால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண் ணீர் அளவு அதிகரிக்கப்பட்டு உள் ளது. நொய்யல் ஆற்றில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் மட்டும் வெள் ளப்பெருக்கு காணப்பட்டு, தற் பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடை காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது. பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான நீல கிரி மற்றும் கேரளம் மலைக்காடுக ளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந் தது. இதனால் 100 அடி கொள்ள ளவு கொண்ட பில்லூர் அணை ஞாயிறன்று இரவு அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாது காப்பு கருதி அணையின் நீர்வரத் தான வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வரு கிறது. அணையில் இருந்து தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருவ தால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் உள்ள பொதுமக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்று காலை மேட்டுப்பாளையம் ஆற்று பாலத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் பவானியாற்றை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரி கள் நேரில் ஆய்வு நடத்தி பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் பில்லூர் அணை உள் ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு பேரி டர் மீட்பு படையினர் பாதுகாப்பிற் காக நிறுத்தப்பட்டுள்ளனர். கரை யோரம் வசித்து வந்த 17 வீடுகளில் இருந்தோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பில்லூர் அணை நிரம்பியதால் தற்போது அணையில் இருந்து வெளியேற் றப்படும் உபரி நீரின் அளவு சற்றே குறைந்து தற்போது 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்க வோ, மீன் பிடிக்கவோ தடை செய் யப்பட்டுள்ளது. கோவை மாவட் டத்தை பொறுத்தவரை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.