பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் பெற முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஜாதி/மத அமைப்பை சார்ந்தவர்கள் யாரேனும் பட்டாசு கடைகளில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் ஏதேனும் பெற முயற்சித்தால் தகுந்த ஆதாரத்துடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, 8190000100 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தகவல் கொடுக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.