tamilnadu

img

கோவையில் அரசு பொருட்காட்சி..!

கோவையில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் மத்தியச் சிறை வளாகத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. 

கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த  ஆண்டும் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.

அடுத்த 45 நாட்களுக்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெற உள்ளது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இங்கு, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,  வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை உட்பட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைத்துள்ளன. 

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க சிறந்த இடமாக இந்த பொருட்காட்சி இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
 

;