tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சேலத்திற்கு இன்று முதல்வர் வருகை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சேலம், ஜூன் 11- சேலத்திற்கு வியாழனன்று (இன்று) வருகை தரும்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா பாசனத்திற் காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்க வுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பாசனம் மூலம் 12  டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு  மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண் டும். அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி யன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, ஈரோட்டி லிருந்து புதனன்று மாலை மேட்டூருக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வியாழனன்று (இன்று) அணையி லிருந்து தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.  இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: மக்கள் அச்சம்

உதகை, ஜூன் 11- பந்தலூர் அருகேயுள்ள எருமாடு பகுதியில் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகேயுள்ள எருமாடு பகுதி முதுமலை வெளிமண்டல வனப்பகுதி மற்றும் கேரளம் மாநி லம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் அதிக அள வில் உள்ளன. இந்நிலையில் எருமாடு பகுதியில் சமீப கால மாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி  குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா  வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. செவ்வாயன்று இரவு எருமாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது. அப்போது வளர்ப்பு நாய் சிறுத்தையை கண்டதும் குறைத்து கொண்டு  அதிக சத்தம் எழுப்பியது. இதனால், சிறுத்தை நாயுடன் சண்டையிட்டு இறுதியில் வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகள் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் குடியிருப்புவாசி களை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே வனத் துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.