tamilnadu

img

கோவையில் உலக சாதனைக்காக கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்

கோவை நாட்டுப்புற கலையில் தொடர்ந்து உலக சோதனையை செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த கலையரசன். இவர் கண்ணாடி துண்டுகள் மீது ஏறி கரகாட்டம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கலையரசன் கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புற கலைகளை கற்று தருவதோடு கிராமிய கலைகளில் பல்வேறு உலக சாதனைகளை செய்து வருகிறார். கலையரசன் மேலும் ஒரு சாதனை முயற்சியாக தலையில் கரகம் வைத்தபடி கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி தொடர்ந்து மூன்று மணி நேரம் கரகாட்டம் ஆடி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 

;