tamilnadu

img

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்த அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு
கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியைக் கடந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். இதனை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர் பாஜகவினர். இதனிடையே தங்களைத் தாக்கிய பா.ஜ.கவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது இன்று வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்த அண்ணாமலை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.