பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழி வளர்ப்பில் தான் அதிகப்படியான விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். கறிக்கோழிகளுக்கு பிரதானமான உணவாக இருக்கும் சோயாவின் விலையை ஒரு சில நிறுவனங்கள் தீர்மானிப்பதால் கறிக்கோழி தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி பறவை காய்ச்சல் ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு, லட்சக்கணக்கான கோழி முட்டைகளை அழிக்க வேண்டிய சூழலுக்கு கறி கோழி பண்ணையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு தடையில்லாமல் சரியான விலையில் சோயா கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். விவசாயம் மற்றும் விசைத்தறிக்கு 750 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்குவது போல கறிக்கோழி வளர்ப்புக்கும் இலவசம் மின்சாரம் வழங்க வேண்டும். சீதோசன நிலை மாறுபடும் பொழுது அதிகப்படியான கறிக்கோழிகள் இறக்க நேர்கிறது. இதனால் கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் காப்பீடு திட்டங்களை பரவலாக்குவதன் மூலம் கறிக்கோழி தொழிலை பாதுகாக்க வேண்டும்.