tamilnadu

img

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி

கோவை, பிப்.9- அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. கோவையில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற்ற பேரணியை ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கொடியசைத்து துவக்கி வைத்தார். பறையிசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இதில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மமக தலைவர் ஜவஹிருல்லா, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு சங்கத்தினர் நீலச்சட்டை பேரணியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.