தமிழக ஆளுநரை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்
கோவை, ஏப்.24- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளி, ஆளுநர் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள, உதகையில் துணைவேந்தர் மாநாட்டை நடத்துவதற்கு கோவை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து கருப்பு கொடிக ளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திரா விடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை ஆளு நர் மாளிகையில் துணைவேந்தர் மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெறு கிறது. இந்த மாநாட்டில் துணை குடி யரசு தலைவர் பங்கேற்கின்றார். இந்நிலையில், உதகையில் நடை பெறும் துணைவேந்தர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் வியாழனன்று தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி கோவை வந்தார். அவரை கண்டித்து திராவிடர் விடு தலை கழகத்தினர் கருப்பு கொடிக ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்த திரண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின ருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விரை வாக போராட்டத்தை நடத்தி கைதா கும் படி காவல்துறையினர் அவ சரப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து திரா விட விடுதலைக் கழகத்தினர் கையில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது தமிழக அரசுக்கு எதிராக வும், தமிழக மக்களுக்கு எதிராக வும் ஆளுநர் ரவி தொடர்ந்து செயல் படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு அனுப்பிய மசோ தாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது தொடர்பாக தமிழ் நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியது. அதில் மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்குவதற்கான காலகெடு வையும் வழங்கியது. இந்நிலை யில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந் திய துணை குடியரசு தலைவர் ஜக தீப் தன்கர் விமர்சனம் செய்திருந் தார். அதே போல ஜார்கண்ட் மாநி லத்தை சேர்ந்த பாஜக எம்.பி, நிஷி காந்த் துபேவும் “ நாட்டில் மத ரீதி யிலான போரை துண்டும் வகையி லும் வரம்பு மீறியும் உச்ச நீதிமன் றம் செல்கிறது என விமர்சித்திருந் தார். இதற்கு கடும் கண்டனம் தெரி வித்தும், கோவை வரவுள்ள துணை குடியரசு தலைவரைக் கண்டித்தும், கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அகிய இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தினர் வியாழ னன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாவட்டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டத் துறை வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் கே.எம்.தண்டபாணி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொருளாளர் மாசேதுங், தேசியக்குழு உறுப்பினர் மு. ஆனந்தன், மாவட்டச் செயலாளர் பி.ஜோதி குமார், பியுசிஎல் தேசிய தலைவர் சா.பாலமுருகன், திரா விட தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சி.வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.