tamilnadu

img

பாரதியார் பல்கலைக்கழகமும் – அடிமைகளாக மாறும் ஆராய்ச்சி மாணவர்களும்!

பாரதியார் பல்கலைக்கழகமும் – அடிமைகளாக மாறும் ஆராய்ச்சி மாணவர்களும்!

கோவையில் அமைந்திருக்கும் பார தியார் பல்கலைக்கழகம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங் களின் கலை அறிவியல் கல்லூரிகளின் தலைமையிடமாகத் திகழ்கிறது. ஆனால், ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புகள் பெருகிவரும் இக்காலத் தில், பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கு வதில் அக்கறை காட்டாமல் தான்தோன் றித்தனமாகச் செயல்பட்டு வருவது  வேதனையளிக்கிறது. அடிமைகளை  விட மோசமாக நடத்தப்படும் ஆராய்ச்சி மாணவர்களின் அவல நிலை குறித்து அவர்கள் தினந்தோறும் போராடியும், பல்கலைக்கழக நிர்வாகமோ அரசும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. தலைமை இல்லாத நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் நலன் காக்க  வேண்டிய துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல்  இருப்பது நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. பதிவாளர் பதவி 7 ஆண்டு களாகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவ லர் பதவி 8 ஆண்டுகளாகவும் காலியாக  உள்ளன. மூன்றாண்டுகளாக துணை வேந்தர் நியமனமும் நடைபெற வில்லை. தற்போது தமிழக அரசு நிறை வேற்றிய வேந்தர் மசோதா உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் சட்டமாகி யுள்ள நிலையில், இனியும் கால தாமத மின்றி துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க் கின்றனர். பதிவாளர், தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் நியமனத்திற்கான குழு அமைக்கப்பட்டும் ஓராண்டாகியும்  எந்த நடவடிக்கையும் இல்லை. கட்டணக் கொள்ளை  பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தாமல், கல்விக் கட்டணத்தை உயர்த்துவதிலேயே முனைப்பு காட்டுகிறது. ஆராய்ச்சி மாணவர்களின் கட்டணம் நூறு மடங்கு  வரை உயர்த்தப்பட்டுள்ளது. Synopsis  கட்டணம் ரூ.3500 லிருந்து ரூ.6000 ஆக வும், Thesis Submission கட்டணம் ரூ. 7000 லிருந்து ரூ.18,000 ஆகவும், Revision/Resubmission கட்டணம் ரூ. 10,000 லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது. எந்தவித கருத்தும் கேட் காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள் ளது. பல்கலைக்கழகம் வருவாய் திரட் டுவதை விடுத்து, மாணவர்களின் கல் வித்தரத்தை உயர்த்த சிந்திக்க வேண் டும். உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசு  உடனடியாகத் திரும்பப் பெற வேண் டும். ரசாயனம் இல்லா ஆய்வுக் கூடங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வுகளுக்குத் தேவையான ரசாய னங்களைப் பெறுவதில் பெரும் சிரமப் படுகின்றனர். 2018 முதல் GEM Portal  மூலம் ரசாயனங்களைப் பெற அறிவு றுத்தப்பட்டாலும், அதில் பொருட்கள் கிடைப்பதில்லை. பல்கலைக்கழகமும் வெளியில் வாங்கிக் கொடுக்க உதவுவ தில்லை. தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் நலன் கருதி  GEM Portal இல் கிடைக்காத ரசாயனங் களை வாங்கிக் கொடுக்கும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த உதவி யும் செய்யவில்லை. இதனால் பல  மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புகள்  கேள்விக்குறியாகியுள்ளன. போலிப் பேராசிரியரா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்சம், ஊழல் தொடர்ந்து நடைபெறுவதாகக் குற்றச் சாட்டுகள் உள்ளன. ஆங்கிலத் துறை யில் பணியாற்றும் முனைவர் பத்மநா பன் நியமனமே சர்ச்சைக்குரியதாக உள் ளது. குறைந்த தகுதியுடன் பணியில் சேர்ந்த அவர், டாக்டர் பட்டம் பெறும் முன்பே ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இது  குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  பல்கலைக்கழகம் பதிலளிக்க மறுத்துள் ளது. அவர் படித்த பல்கலைக்கழகத் தில் விசாரித்தபோது, அவருக்கு டாக் டர் பட்டம் வழங்கப்படவில்லை என்பது  தெரிய வந்துள்ளது. விசாரணை அறிக் கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள் ளது. பல்கலைக்கழகப் பதிவேடுகளி லும் அவரது சான்றிதழ்கள் இல்லை.  ஆனால் அவர் 2021ல் டாக்டர் பட்டம்  பெற்றதாகக் கூறி, 2017 முதலே மாண வர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள் ளார். இந்த முறைகேடுகளை விசாரிக்க  பல்கலைக்கழகம் தயங்குவது வேத னையளிக்கிறது. தமிழக அரசு இப்பிரச் சனையில் தலையிட்டு, மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பறிப்பா?  அரசு கல்லூரி ஆராய்ச்சி மாணவர்க ளுக்கு ஊக்கத்தொகை வழங்க 2022 இல் எடுக்கப்பட்ட முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநில அரசு உத வித்தொகை வழங்குவதாகக் கூறி, பல் கலைக்கழகம் தனது வாக்குறுதியிலி ருந்து பின்வாங்குவது அரசு கல்லூரி மாணவர்களுக்கு மன உளைச்சலை அளிக்கிறது. அறிவிக்கப்பட்ட கல்வி  உதவித்தொகையை பல்கலைக்கழகம் உடனடியாக வழங்க வேண்டும். செயல்படாத மத்திய கருவி மையம் பல கோடி ரூபாய் செலவில் அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மத் திய கருவி மையம் பல ஆண்டுகளாகப்  பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. ஆராய்ச்சி மாணவர்களின் துல்லிய மான ஆய்வுகளுக்காக உருவாக்கப் பட்ட இந்த மையம் முடங்கிக் கிடப்பது  மாணவர்களுக்குப் பெரும் ஏமாற் றத்தை அளிக்கிறது. அடிமைகளா ஆராய்ச்சி மாணவர்கள்?  பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி களுக்கு வரும் ஆராய்ச்சி மாணவர்கள்  மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை. முறையான விடுதி வசதிகள் இல்லை. விளையாட்டு மைதானம் கூட மாண வர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒரு சில  வழிகாட்டிகள் மாணவர்களை சொந்த  வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக் கும் பயன்படுத்துவதாகவும், பரிசு கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள் ளன. VIVA தேர்வுகளை முறையாக நடத்தாமல் விருந்து போல் நடத்துவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு உயர் கல்வியில் சாதனைகள் படைக்க உள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், உட னடியாக அனைத்துப் பல்கலைக்கழ கங்களிலும் காலியாக உள்ள துணை வேந்தர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆராய்ச்சி மாண வர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டங் களை நடத்த வேண்டும். அவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்பட வேண்டும். அவர்கள் 5 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். தேவையான வசதி களை செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கும் வழிகாட்டிக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த முயற் சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஆராய்ச்சி மாணவர்களின் நல னில் அக்கறையுடன் செயல்பட வேண் டும்.  - தினேஷ்ராஜா கோவை மாவட்ட பொருளாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட் டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர்  செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மனு வும் அளித்தனர். கோவை மாவட்டம், மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல் கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள்  கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சுருக்க ஆய்வுரை, முழு ஆய்வு அறிக்கை மற்றும் மறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் அகமது ஜூல்பி தலைமையில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் பொருளாளர் தினேஷ்ராஜா மற்றும் ஏராளமான மாண வர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திரண்டனர். அவர் கள் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங் களை எழுப்பினர்.