மாணவர்களை மற்றவரோடு ஒப்பிடுவதை தவிர்த்திடுக: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
கோவை, ஜூன் 13 – மாணவர்களை மற்றவரோடு ஒப்பிடு வதை தவிர்க்க வேண்டும், என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இவ் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி யின் முன்னாள் மாணவரும், பிரபல நடிகரும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான சிவக்குமார், அவரது மகனும் நடிகருமான கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்க ளுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகைக ளும் வழங்கப்பட்டன. அப்போது கார்த்தி, தமி ழக அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் வெளி நாட்டுப் பள்ளிகளுக்கு இணையாகவும், உயர் தர கல்வி வழங்கப்படுவதாகவும் பெருமையு டன் கூறினார். மேலும், தனது தந்தையின் சகோ தரி இளமையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்குச் செல்ல சிரமப்பட்ட சம் பவத்தை நினைவுகூர்ந்து கண்ணீர் வடித்தார். அப்போது பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன் கொடை அளிப்பதாக அறிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாணவர்களை ஒருவருடன் ஒப்பிடு வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒவ் வொரு மாணவரும் தனித்துவமானவர் என் றும் கூறினார்.