tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களின் பேரவை வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வாக்கு சேகரிப்பு

ஈரோடு, பிப்.8- அனைத்து சுமைப்பணி தொழி லாளர்களின் தேர்தல் சிறப்பு பேரவை  கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரோடு  கிழக்கு தொகுதி  காங்கிரஸ் வேட் பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்  கலந்து கொண்டு வாக்கு சேகரித் தார். அனைத்து சுமைதூக்கும் தொழி லாளர் தேர்தல் பேரவை கூட்டம் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவருமான ஆர்.ரகுராமன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சிபிஎம் ஈரோடு நகரக்கமிட்டி உறுப்பினர் பி.சுந்தரராஜன் வரவேற்றார். தமிழ் நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளரு மான சு.முத்துசாமி, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளருமான காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  முன்னதாக, ஈரோடு மாவட்டத் தில் உள்ள அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்க ளுடைய முழுமையான ஆதரவை  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் கட்சியின் வேட் பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவ னுக்கு அளிப்பது என தீர்மானம் நிறை வேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், சிபிஎம் மூத்த  தலைவர் கே.துரைராஜ், சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் பி. மாரிமுத்து, தலைவர் எஸ்.சுப்ர மணியன், சிஐடியு சுமைப்பணி யாளர் சங்க தலைவர் டி.தங்க வேலு ஆகியோர் உரையாற்றினர்.  இக்கூட்டத்தில், சுமைப்பணியா ளர்கள் பெருந்திரளாக பங்கேற் றனர். முடிவில், எல்பிஎப் நிர்வாகி செ.தங்கமுத்து நன்றி கூறினார்.

;