வாரச்சந்தைக்கான ஏலத்தில் வாக்குவாதம்
வெண்ணந்தூர் அருகே நடைபெறும் வாரச்சந்தைக் கான ஏலக் கூட்டத்தில், அதி முக, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், 2025 -2026 ஆண் டிற்கான வாரச்சந்தைக்கான ஏலமானது, கடந்த மார்ச் மாதமே நடைபெற வேண்டிய நிலையில், நிர்வாக காரணமாக கடந்த 3 முறையாக தள்ளி வைக்கப்பட்டதாக கூறப் படுகிறது. இந்நிலையில், புதனன்று மீண்டும் ஊராட்சி மன்றக் கூடத்தில் ஏலத்திற்கான கூட் டமானது, வட்டார அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அதிமுக, திமுகவினர் என பலரும் கலந்து கொண்ட நிலையில், ஏலம் சம்பந்தமான கூட் டம் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தெரி விக்கப்பட்டது. இதனால் சுமார் 15 நிமிடத் திற்கு மேலாக அதிமுக, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இறுதியாக ரூ.5,41,000க்கு ஏலம் விடப் பட்டது.