கோவையில் வியாழனன்று காந்திபுரத்தில் துவங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயணக்குழு கண்ணப்பநகர், துடியலூர், சிவானந்தபுரம், ஆவாரம்பாளையம், தண்ணீர் பந்தல், வரதராஜபுரம், ஒண்டிபுதூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இளைஞர்களின் சிறப்பான வரவேற்பை பெற்று வியாழன் இரவு இருகூர் பகுதியை வந்தடைந்தது. இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார் தலைமை தாங்கினார். சூலூர் தாலுகாச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.