அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிதி மேலாண்மை முறைகளை சீரமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கணக்குப்பரிமாற்றங்கள் மற்றும் வட்டி கணக்கீட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும், அனைவருக் கும் தவணைச்சலுகையுடன் (DA) கூடிய மாதம் ரூ.9,000/- குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா தலைமை தாங்கினார். இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகரா சன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.