tamilnadu

img

எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம்

நாமக்கல், ஆக.29- எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த நாமக்கல்லில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி, குளக்கரை சாலையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்ஐவி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் – 2025யை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெள்ளியன்று தொடங்கி வைத்தார். ஆக.12 முதல் அக்.12 வரை 60 நாட்களுக்கு எய்ட்ஸ் குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இதனிடையே, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன. பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் க.பூங்கொடி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.