tamilnadu

img

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். எஸ்பி வேலுமணி வருமானத்திற்கு  அதிகமாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு இன்று அவரது வீடு உள்பட 58 இடங்களில் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று கோவையில் எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷ் வீடு உள்ளிட்ட 41 இடங்களிலும், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்களிலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1  இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும் என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், எஸ்.பி. வேலுமணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 13 பேர் மீது கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.