வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கும் இயக்கம்'
சிபிஎம் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு'
சேலம், மே 26- வீட்டுமனை பட்டா கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீட்டுமனை பட்டா மற்றும் நில பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆட்சேபனை அற்ற அரசு புறம் போக்கு நிலங்களில் வசிப் போருக்கு பட்டா, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசிப்போருக்கு வரன்முறை அடிப்படையில் பட்டா, வழக் கொழிந்த நீர் நிலைகளில் குடியி ருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் நிலங்க ளுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். சொந்த நிலம் மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட் டத்தில் சேலம் மாநகரம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, ஆகிய நான்கு மையங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரம் சேலம் கோட்டை மைதானத் தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் மாநி லக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரு மான நாகை மாலி ஆகியோர் சிறப் புரையாற்றினர். இதில் கிழக்கு மாந கர செயலாளர் கே. பச்சமுத்து மேற்கு மாநகர செயலாளர் பி. கணேசன் வடக்கு மாநகர செயலா ளர் என். பிரவீன் குமார் சேலம் தாலுக்கா ஒருங்கிணைப்பாளர் கே. பி. சுரேஷ்குமார் ஏற்காடு ஒன்றிய செயலாளர் டி. நேரு வாழப்பாடி செயலாளர் வி. பழனிமுத்து பன மரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் கே.செவந்தியப்பன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். மேட்டூர் மேட்டூர் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் கட்சியின் மாநில குழு உறுப் பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான பி. டில்லி பாபு, மாநிலக் குழு உறுப்பினர் ஏ. குமார், ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ். வசந்தி மேச்சேரி ஒன்றிய செயலாளர் ஜி. மணிமுத்து நங்க வள்ளி ஒன்றிய செயலாளர் ஆர்.கிருஷ்ணவேணி உள்ளிட்டு பல பங்கேற்றனர். ஆத்தூர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு மாநிலக் குழு உறுப்பின ரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கு. சின்னதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் ஆத்தூர் தாலுகா செயலா ளர் ஏ. முருகேசன் கெங்கவல்லி தாலுகா செயலாளர் தமிழ் மணி பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா செயலாளர் ஏ. ஆறுமுகம் கல்வராயன் மலை கமிட்டி செயலா ளர் ஏ.பாக்யராஜ், அமைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து, உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். சங்ககிரி சங்ககிரி கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் மாநில செயற்குழு உறுப்பி னர் செ. முத்து கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.இதில் சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ. ஆறுமுகம் எடப்பாடி தாலுகா செயலாளர் கே. நடராஜ் கொங்கணாபுரம் ஒன்றிய செயலா ளர் எஸ். முத்துசாமி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடைபெற்ற பட்டா கேட்கும் போராட்டத்தில் பல ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் வீட்டு மனை நில பட்டா கேட்டு அதிகாரி களிடம் மனு அளித்தனர்.