tamilnadu

img

சூலூர்: சாலை விபத்தில் சிக்கி 4 உயிரிழப்பு 


கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர். இவர் கட்டிட காண்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்நிலையில் இவரும் இவருடன வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட  4  பேரும் கோவை வழியாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல சென்று கொண்டிருந்தனர்.இவர்கள் வந்த காரை முகம்மது பசீர் ஓட்டி வந்துள்ளார்.கார் சூலூர் பட்டணம் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது  ,  வெள்ளலூர் பிரிவு அருகே  திருச்சியிலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியுடன் நேருக்கு நேராக   மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். காரை ஓட்டி வந்த டிரைவர் பஷீர் ஷீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர் மட்டும் பலத்த காயங்களுடன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்து குறித்து  தகவல் அறிந்து சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.   
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து சூலூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக கொச்சி நெடுஞ்சாலையில்  சிறிது நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.