tamilnadu

img

ஜூன் 18 திருப்பூரில் 4 மாவட்ட தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம்

ஜூன் 18 திருப்பூரில் 4 மாவட்ட தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம்

திருப்பூர், ஜூன் 11- ஜூலை 9 வேலை நிறுத்த போராட் டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்கு,  திருப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி ஈரோடு,  திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய  நான்கு  மாவட்டங்களைச்  சேர்ந்த  முன்னணி தொழிற்சங்க தலைவர்கள்  பங்குபெறும் கூட்டத்தை நடத்துவது  என அனைத்து தொழிற்சங்க கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் புத னன்று ஊத்துக்குளி ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற் றது. ஏஐடியுசி மாவட்ட பொதுச் செய லாளர் பி. ஆர் நடராஜன் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்டத் தலைவர் ஜி.சம் பத், துணைத் தலைவர்கள் கே.உண் ணிகிருஷ்ணன், பி.பாலன், ஏஐடியூசி  பனியன் பேக்டரி  லேபர் யூனியன்  பொதுச்  செயலாளர் என்.சேகர், எல்  பிஎப் மாவட்ட துணைத் தலைவர் ரங் கசாமி, எல்பிஎப் சுகாதார செயலாளர்  அறிவழகன், ஐஎன்டியுசி மாவட்ட துணைச் செயலாளர் ரஜினி, எச்எம் எஸ் மாவட்டச் செயலாளர் முத்து சாமி, எம்எல்எப் பனியன் சங்கச் செய லாளர் வெங்கடாசலம், யுடியுசி மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார், இணைச்செயலாளர் விஜயகுமார், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து தரப்பு தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதி யமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9  ஆயிரம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற் பனை செய்யக் கூடாது. மேலும், ஒன் றிய பாஜக மோடி அரசின் தொழிலா ளர் விரோத, மக்கள் விரோத, ஜன நாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், 44 தொழிலாளர் நலச் சட் டங்களை நான்கு தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்  ஜூலை 9 ஆம் தேதி நாடு முழுவதும்  பொது வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. திருப்பூர் மாவட்டத்தில் முழுமை யாக வேலை நிறுத்தத்தை வெற்றி  பெற செய்திட தொடர் பிரச்சாரம் மேற் கொள்வது; அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கங்க ளுக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுப் பது; மாவட்டம் முழுவதும் தயாரிப்பு  கூட்டங்கள் நடத்துவது; திருப்பூர் பிர தான சாலைகளில் பிரச்சாரம் மேற் கொள்ள 200 பேர் கொண்ட பிரச்சாரக்  குழு அமைப்பது; ஜூன் 18 ஆம்  தேதி ஈரோடு, திருப்பூர், கோவை,  நீலகிரி ஆகிய மாவட்ட முன்னணி  தலைவர்கள் பங்கு பெறும் வகையில்  விரிவான பிரச்சாரம் மேற்கொள்வது  குறித்த திட்டமிடல் கூட்டத்தை திருப் பூரில் நடத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.