நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
சேலம், மே 25- கருப்பூர் அருகே 2 வயது பெண் குழந்தை, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள கோட்டக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – ரேவதி தம்பதி யரின் மகள் சிந்துஜா (2). இந்நிலையில், ஞாயிறன்று நீர்த்தேக்கத் தொட்டியை தண்ணீரை திறந்து வைத்துவிட்டு, குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள் ளார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிந்துஜா, தண்ணி தொட்டியில் விழுந்துள்ளார். இதையடுத்து குழந்தை காணவில்லை எனக்கூறி ரேவதி, அரு கில் தேடிப் பார்த்து விட்டு தொட்டியில் உள்ளே பார்த்தபோது, சிந்துஜா நீரில் மூழ்கியவாறு கிடந்துள்ளார். இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர் ஓமலூர் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தக வலறிந்த கருப்பூர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழிப்பறி கொள்ளையன் 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது
நாமக்கல், மே 25- நாமக்கல் அருகே நடைபெற்ற ரூ.6.60 லட்சம் வழிப்பறி வழக்கில், தலைமறைவான கேரளாவைச் சேர்ந்தவரை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், சுங்கக்காரம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவர் கருப்பட்டிபாளையம் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் கேஷியராக பணியாற்றி வந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு செப்.16 ஆம் தேதி ரவிக்குமார் வங்கியில் செலுத்துவதற்காக, நிறுவனத்திற்கு சொந்தமான பணம் ரூ.6.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாக னத்தில் நாமக்கல் நோக்கி சென்றார். அவருக்கு பின்னால் மற் றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், ரவிக்குமாரை வழிமறித்து, இரும்பு கம்பியால் தாக்கி கீழே தள்ளிவிட்டு, பணத்தை பறித்துக்கொண்டு தப்பி யோடிவிட்டனர். இதுகுறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் 10 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உதயா (எ) உதயகுமார், கேரளாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற நாமக்கல் போலீ சார் உதயகுமாரை, 17 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று கைது செய்தனர்.'
மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
உதகை, மே 25- நீலகிரி மாவட்டத்தில், ஞாயிறன்று காலை முதலே நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் அதிக மரங்களைக் கொண்ட இடமான ட்ரீ பார்க் பகுதிக்கு கேரளம் மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியிலி ருந்து 14 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப் போது உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலை யில் அமைந்துள்ள ட்ரீ பார்க் பகுதியில் சுற்றிப் பார்க்கும் போது, மரம் முறிந்து விழுந்து பிரசித், ரேகா தம்பதியின ரின் மகன் ஆதிதேவ் (15) தலையின் மீது விழுந்த தில், அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தக வல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உடலை மீட்டு உதகை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம னைக்கு உடற்கூராய்விற் காக அனுப்பி வைத்தனர்.