tamilnadu

img

மலேசிய ஓபன் பேட்மிட்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியுற்றார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்


மலேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இந்தாண்டின் மலேசிய ஓபன் பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீனா நாட்டு வீரர் சென் லாங்கை எதிர் கொண்டார். இரு வீரர்களுக்கு இடையேயான கடுமையான போட்டியில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங் 21-18 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் மலேசிய ஓபன் தொடரிலிருந்து இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார். மேலும், மலேசிய தொடரிலிருந்து இந்தியா சார்பில் பங்கு பெற்ற குழுவும் வெளியேறியுள்ளது.


;