கோவை, டிச. 8 பொதுச்சமூகம் கண்டு கொள்ள மறுத்தவர்களின் வாழ்க் கையை படைப்புகளாக வெளிக் கொணர்ந்துள்ள சி.ரவீந்திர னின் கதைகள் மனித இனங்க ளின் வாழ்வியலையும்,வர்க் கத்தையும் பேசுகிறதென எழுத் தாளர் ச.தமிழ்செல்வன் பெருமிதத் தோடு தெரிவித்தார். கோவையை சேர்ந்த எழுத்தா ளர் சி.ஆர் என சக படைப்பாளி களால் கொண்டாடப்படுகிறவர் சி.ரவீந்திரன். இதுவரை 14 நாவல்கள், 8 சிறுகதை தொகுப் புகள், 5 மொழிபெயர்ப்புகள், 2 திற னாய்வு நூல்கள், ஒரு நாடகம் என தமிழ்கூறும் நல்லுகிற்கு படைப்பு களை கருக்கொண்டு உருவாக்கி தந்துள்ளார். வானப்பாடி எழுத்தா ளர்களின் ஒருவரும், படைப்பு முன் னோடிகளில் ஒருவருமான கொங்கு மண்டல எழுத்தாளர் சி.ரவீந்திரன் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் கோவையில் ஞாயி றன்று திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் கோவை மாவட்டக் குழு வினர் ஏற்பாடு செய்த இந்நிகழ் விற்கு மாவட்ட தலைவர் தி.மணி தலைமை தாங்கினார். இரா.வெங் கடேசன் வரவேற்புரையாற் றினார். தமுஎகச மாவட்ட துணை செயலாளர் தங்க.முருகேசன் துவக்கவுரையாற்றினார். முன்ன தாக சி.ஆர். நாவல்கள் குறித்து கவி ஞர் மீ.உமாமகேஷ்வரியும், சிறு கதை உலகம் குறித்து எழுத்தா ளர் அ.கரீம் ஆகியோர் உரையாற் றினர். தமுஎகச மாவட்ட செயலா ளர் மு.ஆனந்தன் வாழ்த்துரையாற் றினார். சி.ரவீந்திரன் படைப்புகளின் பரிமாணங்கள் குறித்து தமுஎகச மாநில கௌரவ தலைவர் எழுத்தா ளர் ச.தமிழ்செல்வன் சிறப்புரை யாற்றினார்.அப்போது அவர்பேசு கையில், சி.ஆரின் சிறுகதை கள் விரிவான விவரணைக ளோடு எழுதப்பட்டு கேமரா வில் பதிவானதைப்போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியான தனித்துவ அடை யாளத்தோடு இவரது சிறு கதைகள் உள்ளது.சிறுக தைகளே இப்படியிருக்கிறது என் றால் நாவல்களில் விவரணை கள் அதிகமாக இருக்கும் என்கிற எண்ணத்தோடு வாசித்தால் நாவல்கள் சொற்சிக்கனத்தோடு படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு நாவலும் ஒவ்வொரு வித மானவர்களின் வாழ்க்கையை பேசுகிறது. எனது நாற்பதாண்டு வாசிப்பு அனுபவத்தில் எனது கொள்கைக்கு மிக நெருக்கமான படைப்பாளி சி.ஆர்.என்பதை உணர்ந்துகொண்டேன். இன் குலாப் ஜிந்தாபாத், கம்யூனிஸ் ட்டுகள் வாழ்க என்கிற கோச மில்லை. இவர் தேர்ந்தெடுத்த கதைக்களம் சொல்லுகிறது முற் போக்கானவர், இடதுசாரி எழுத் தாளர் என்பதை. பழங்குடிகள், குற வர்கள் என பொதுச்சமூகம் கண்டு கொள்ள மறுத்தவர்களின் வாழ்க் கையை படைப்புகளாக வெளிக் கொணர்ந்துள்ளார். இவரின் கதைகள் மனித இனங்களின் வாழ் வியலை, வர்க்கத்தை பேசுகிறது. அதே நேரத்தில் கதாசிரியன் தோளில் அமர்ந்து பிரசங்கம் செய் யும் படைப்புகளாக இல்லாமலி ருப்பதே இவரின் படைப்புகளின் தனித்துவ அடையாளம். இவ ரின் நாவல்கள், கதைகளை வாசிக் கையில் ஒவ்வொரு வரியும் ஒரு திறப்புகளை, புதிய சிந்தனை களை கொடுப்பதாக இவரின் படைப்புகள் உள்ளது. நம் காலத் தின் கதாநாயகன் கொண்டா டப்பட வேண்டியவர் சி.ரவீந் திரன் என்றார். நிறைவாக சி.ரவீந்திரன் ஏற் புரையாற்றினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் அக்னிபுத்திரன், பு.அ. இரவீந்திரன், கவிஞர் நித்திலன், எஸ்.பாலச்சந்திரன், சுப்ரபாரதி மணியன், மு.பரமேஸ்வரன் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர். முடிவில் மனோ.இளங்கோ வன் நன்றி கூறினார்.