tamilnadu

img

தருமபுரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

தருமபுரி, மே 9-தருமபுரி அருகே குரும்பட்டி, கொட்டாய்மேடு ஆகிய பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தருமபுரி -அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தருமபுரி ஒன்றியத்துக்குட்பட்ட குரும்பட்டி,கொட்டாய்மேடு ஆகிய கிராமங்கள் இங்கு கடந்த 6 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை. குடிப்பதற்குஆழ்துளை குழாயில் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்திவந்தனர். தற்போதுஅவையும் பழுதடைந்ததால் குடிநீர்இல்லாத சூழல் உள்ளது. இதுதொடர்பாகஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் தருமபுரி - அரூர் சாலையில் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி முன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தருமபுரி நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்ததின் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

;