tamilnadu

img

ஊருக்கே விருந்து படைத்தோரின் அவலம்

ஆட்கொல்லி வைரசாக கருதப்படும் கொரோனா ஒட்டு மொத்த மனித குலத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இத னால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன மருத்துவ உலகம் மிகப்பெரும் சவாலை சந்தித்து வரும் நிலையில், மறு புறம் அடித்தட்டு மக்கள் அடுத்த வேளை உணவிற்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கும் திருமணம் உள் ளிட்ட அனைத்து விசேஷங்க ளுக்கும் அறுசுவை விருந்து படைத்த சமையல் கலைஞர் கள் தற்சமயம் ஒருவேளை உணவிற்கு கையேந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்தக் கொரோனா ஊரடங்கு தங்களை எவ்வாறு பாதித்துள்ளது என அவர்கள் கூறுகையில்,

சரவணன்

சமையல் தொழிலாளியான இவரது சொந்த ஊர் திருநெல் வேலி. தற்போது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தை அடுத்த காவேரி ஆர். எஸ் பகுதியில் வசித்து வரு கிறார். ஈரோடு, கோவை உள் ளிட்ட ஊர்களுக்கு சமையல் வேலைக்குச் செல்லும் இவர் கூறியதாவது, மாதத்தில் 15 நாட்களுக்குத் தான் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு ரூ  500 கூலி கிடைக்கும். போக்கு வரத்து, உணவு, ஆரோக்கியம்,  குடும்பச் செலவு என அனைத் தும் இதிலிருந்து தான் செய்ய வேண்டும்.   தற்போது இரண்டு மாதங் களாக ஊரடங்கு அமலில் உள் ளதால் வேலை எதுவும் இல்லை. இதனால் வருமான மும் இல்லை. ரேசன் கார்டு ஊரில் உள்ளதால் இங்கு அரசு வழங்கிய உதவிகள் எதுவும் பெற முடியவில்லை. அருகில் வசிப்பவர்களிடம் ரேசன் அரிசியைப் பெற்று சாப்பிட்டு வருகிறோம். என்னைப் போல இப்பகுதியில் சுமார் 50 பேர் உள்ளனர். ஓட்டல் கடை இருந்தாலாவது வேலைக்குப் போகலாம். அதுவும் இல்லை என்று குறிப்பிடுகிறார். நல வாரியத்தின் மூலம் உதவி கிடைத்ததா என்ற கேள்விக்கு தான் அதில் பதிவு செய்ய வில்லை  என்றார். மேலும் பதிவு செய்தவர்களிலும் பல பேர் புதுப்பிக்காததால் அரசு அறிவித்த நிவாரணம் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றார்.

முத்து

50 வயதான இவரது சொந்த ஊர் திண்டுக்கல். 17 ஆண்டுகளாக நாமக்கல் அருகே வசித்து வரும் எனக்கு ரேசன் கார்டு இல்லை. அத னால் அரசு வழங்கிய ரூ.1000 நிவாரணமும்,  இலவச உணவுப் பொருட்களையும் பெற முடியவில்லை. மேலும் வேலையும், வருமானமும் இல் லாததால் யாரிடம் கடன் கேட்டாலும் இல்லை என்கி றார்கள். வெளியில் கிடைக் கும் ரேசன் அரிசி கிலோ ரூ.8 -க்கு வாங்கி பயன்படுத்தி வரு கிறோம். குழம்பிற்கு வழியில் லாததால் கஞ்சி வைத்து குடிக் கிறோம். வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டபோது நிலை மையை எடுத்துக் கூறியதால் பிறகு வற்புறுத்தவில்லை. மேலும், தேநீர் கடையில் கடன் கிடைக்கிறது.  எனது மனைவி மாமியார் (ஈரோடு) வீட்டிற்குப் போய்விட்டார். என்னால் எங்கும் போக முடிய வில்லை. கொஞ்ச நாள் சிஐடியு அலுவலகத்தில் உணவு சமைத்துப் போட்டனர். அதை யும் இடைவெளியைக் கடை பிடிக்கவில்லை என அதிகா ரிகள் நிறுத்தி விட்டனர், இப் போது பெரும் சிரமத்தில் தான் வாழ்க்கையை நகர்த்தி வரு கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சுரேஷ்பாபு

மதுரை மேலூரைச் சேர்ந்த இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளி யேறி அழைத்த இடங்களுக்குச் சென்று சமையல் வேலையில் ஈடுபட்டு வருகிறார். காவேரி பகுதியில் வசிக்கும் தனி நப ரான இவர் ஆதார் அட்டை,  வாக்காளர் அட்டை பெற்றுள் ளார். இவருக்கும் ரேசன் கார்டு இல்லாததால் அரசின் எந்த உதவியும் பெற முடிய வில்லை. இதுகுறித்து இவர் கூறுகையில், அமைச்சர் கொடுத்த அரிசி,  பருப்பு உள் ளிட்ட பொருட்களை வைத்து ஒரு வாரத்தை ஓட்டினேன். முன்னதாக சம்பாதிப்பதை சாப்பிடுவோம் செலவழிப் போம்.  எனவே வங்கிக் கணக்கு, சேமிப்பு  போன்ற எது வும் தேவைப்படவில்லை. ஆனால், இப்போது எங்கே அன்னதானம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளேன் என்கி றார் வேதனையோடு.

ஞானசேகரன்

சேலம் மாவட்டம்,  ஆத்தூர் தாலுகாவிலுள்ள கோனேரிப் பட்டியைச் சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே சமையல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். காய் வெட்டுவது, சப்ளை செய் வது உள்ளிட்ட வேலை செய்து வந்த இவர் கூறுகையில், எனக்கு அரசு அறிவித்த ஆயி ரம் ரூபாயும் கிடைக்கவில்லை. ரூ.500 -ம் வரவில்லை. பெரிய செலவு எதுவும் இல்லாததால் அடுத்த வேளை உணவுக்கு வழி செய்தால் போதும். டீ செலவுக்கு காசு கொடுத்தால் கூட போதும் என மிக பரிதாப மாகக் கூறுகிறார். ஒவ்வொரு விசேஷங்களி லும் ஊருக்கே அன்னமிட்ட இந்த கைகள், தற்போது அன்ன தானத்தை எதிர்பார்த்து கையேந்தி கிடக்கும் அவலத் திற்கு தள்ளப்பட்டுள்ளது கேட் போர் அனைவரையும் வேத னைக்கு உள்ளாக்கியுள்ளது.  

      -எஸ்.சக்திவேல்