தருமபுரி, டிச.19- பாப்பாரப்பட்டியில் வியாழனன்று கூடிய சந்தையில் அதிகளவில் ஆடு, மாடுகள் விற்பனை யானது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வாராந் திர சந்தை வியாழனன்று கூடியது. சந்தைக்கு தரும புரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டிமற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏராளமான ஆடு, கோழி, மாடுகளை விற்பனைக் காக கொண்டு வந்திருந்தனர். இதனை வாங்க வியாபாரிகள் அதிகாலை முதலே சந்தையில் குவிய தொடங்கினர். இதில் தரம் வாரியாக ஒரு மாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கத்தை விட சந்தையில் அதிகளவில் ஆடு, மாடு, கோழிகள் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது என்றனர்.