tamilnadu

img

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூர், பிப். 26- தமிழ்நாடு மாநில தேர்தல்  ஆணையத்தின் அட்டவணையின் படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் புதனன்று வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அப்போது, திருப் பூர் மாநகராட்சியின் வாக்காளர் எண்ணிக்கையில் புதிய சட்டமன்ற வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதின்படி கூடுதலாக 16,051 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு தற் போது 6,83,302 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல், மாவட்டத் தில் உள்ள 5 நகராட்சிகளின் வாக்கா ளர் எண்ணிக்கையில் புதிய வாக் காளர்களாக 6,950 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு தற்போது 2,15,067 வாக்காளர்கள் உள்ளனர். 16 பேரூ ராட்சிகளில் வாக்காளர் எண் ணிக்கை தற்போது 1,97,575 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் 1400 வாக் காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் மாநகராட்சியில் 603 வாக் குச்சாவடிகளும், நகராட்சிகளில் 233, பேரூராட்சிகளில் 281 வாக் குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பணைகள், கருத்துக்கள் இருப் பின் மார்ச் 2 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களின் ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலனை மேற்கொள்ளப்படும். பின்னர் மார்ச் 5ல் இறுதி வாக்குச் சாவடி பட்டியல்கள் வெளியிடப்ப டும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங் கர்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி இயக்குநர் பேரூ ராட்சிகள் கணேஷ்ராம் மற்றும் அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.