tamilnadu

உடுமலை மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

இருசக்கர வாகன பழுது நீக்குவோரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

உடுமலை, நவ. 21- உடுமலையில் இரு சக்கர வாகன பழுது நீக்கு வோர் சங்கத்தினரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தின் இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கத்தின் 26 ஆவது ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதனையொட்டி ஹெல்மெட் விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற் பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கலந்து கொண்ட பேரணியானது உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்திலி ருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட் டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு, மோட் டார் வாகன ஆய்வாளர் செல்வி தீபா ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் விபத்தில் காயமடைந்த சக தொழி லாளருக்கு சங்கத்தின் மூலமாக ரூ.60 ஆயிரத்திற் கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், உடு மலை மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கத்தி னருக்கு எஸ்ஆர்கே ஹோண்டா மற்றும் வீடால் ஆயில்  நிறுவனத்தின் சார்பில் 85 தலைக்கவ சங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், நவ. 21- திருப்பூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ் வாதார இயக்கம், திருப்பூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களைக் கொண்டு வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனியன்று  (நவ.23) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப் பட உள்ளது. இம்முகாமில் பள்ளிக்கல்வி, தொழிற்ப யிற்சி (ஐடிஐ), பட்டயப்படிப்பு (டிப்ளமோ), இளங் கலை மற்றும் முதுகலை படித்த அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது சுய விபரம், அனைத்து கல்விச் சான்றிதழ் களின் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2 உடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவிநாசியில் தொடர் வழிப்பறி  பீகார் மாநில வாலிபரிடம் காவல்துறை விசாரணை

அவிநாசி, நவ. 21- அவிநாசி பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தொடர் புடைய வடமாநில வாலிபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடை பெற்றது. மேலும் சாலையில் சென்றவர்களை வழி மறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக் கும் வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசி காவல் துறை யினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமு தல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் (37) என்றநபர் துப்பாக்கிகளை விநியோகம் செய் தது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து அவிநாசி காவல் துறை யினர் பீகார் சென்று, அங்கு மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஆசிக்கை அவிநாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் வழப்பறியில் ஈடுபட்ட நபர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 2 துப்பாக்கிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

மாதர் சங்க புதிய கிளை அமைப்பு

திருப்பூர், நவ. 21 – திருப்பூர் பத்மாவதிபுரம் கே.எஸ்.கே.படிப்பகத்தில்  புதனன்று மாதர் சங்க கிளை அமைப்புக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கிளை தலைவராக மணி,  செயலாளராக எம்.லலிதா, பொருளாளராக மனோன் மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்ன தாக இக்கூட்டத்தில் மாதர் சங்க திருப்பூர் மாவட் டத் தலைவர் ஆர்.மைதிலி,  மாநகரத் தலைவர் வளர் மதி ஆகியோர் கலந்து கொண்டு மாதர் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.