பூளவாடியில் நாராயண கவிக்கு முழு உருவ சிலை அமைக்க கோரிக்கை
உடுமலை, ஜூன் 15 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் மடத்துகுளம் கிளையின் 15 ஆவது மாநாடு புதன்கிழமை பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கிளை மாநாட்டில் பகுத்தறிவு கவி ஞர் உடுமலை நாராயண கவிக்கு அவரது சொந்த ஊரான பூளவாடியில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும், பள்ளிகளி லும் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் கிராமிய கலைகளை யும், கலைஞர்களையும் பயன்படுத்த வேண்டும் என் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். மடத்துக்குளம் கிளை தலைவர் கடத்தூர் ஜெயராமன், செயலாளர் ராஜரத்தினம், பொருளார் பஞ்சலிங்கம், துணை தலைவர்கள் கலியமூர்த்தி, தெய் வாணை, துணை செயலாளர்கள் கணேஷ், பன்னீர் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தோழன் ராஜா, உடுமலை கிளை செயலளார் துரையரசன் உள் பட திரளானோர் கலந்து கொண்டார்கள்.
மூன்று முறை தேர்தல் ஒத்திவைப்பு காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர், ஜூன் 15- திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தேதி மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த கட்சியினர் பார்க் ரோடு கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட, மாந கர மற்றும் வட்டார பதவிகளுக்கான தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தல் தேதி கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.ஆனால் திடீரென தேர்தல் தேதி தள்ளிப் போடப்பட்டது. அதையடுத்து 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டு அப்போதும் தேர்தல் நடைபெறவில்லை. மூன்றாம் முறையாக 15ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் கட்சியினர் ஏராளமானோர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால் மீண்டும் தேர்தல் நடைபெறவில்லை. மூன்று முறை தேர்தல் தேதி தள்ளிவைக்கப்பட் டதை கண்டித்து 70க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவல கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங் கிரஸ் திருப்பூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மனோகரிடம் கட்சியினர் புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என கூறிய தாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
தாராபுரம், ஜூன் 15- தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கி. லீலாவதி விடுத்துள்ள அறிக்கையில், கூறியிருப்பதா வது மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்கும் போது விவசாயிகளிடம் ஆதார் எண் கேட்டு வாங்க வேண்டும். ஒரே நபருக்கு அதிக படியான உரங்களை விற்பனை செய்ய கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு உரங்களை மட்டுமே வழங்கவேண்டும். மேலும் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை செய்பவர்கள் கட்டாயம் விற்பனை ரசீது வழங்க வேண்டும். உரக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் அனுமதிக்கப்பட்ட உரம், பூச்சிமருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், தங்களின் விற்பனை உரிமம் மற்றும் விலை விபரங்களை அனைவரும் காணும்படி வைக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிம ருந்து விற்பனை செய்பவர்கள் அங்கீகாரம் பெறாத நிறு வனங்களில் உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்து களை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. உரக்கடை உரிமையாளர்கள் அரசு நிர்ண யித்த விலையை விட அதிக விலை மற்றும் விவசாயி அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கண்டறியப் பட்டால் உரகட்டுபாட்டு ஆணை 1985 ன்படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள் ளது.
சுத்திகரித்த குடிநீர் வழங்க கோரிக்கை
திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் சுத்திக ரித்த குடிநீரை வழங்குமாறு நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் தலைவர் எஸ். காதர் பாட்சா விடுத்துள்ள அறிக்கையில், குடிநீர் கிணறுகள் முற்றிலும் வற்றி விட்டது. இந்நிலையில் பல பகுதிகளில் குடிநீர் குழாய்களில் நீர்க்கசிவு, உடைப்பு ஏற்பட்டு ஒரு கிராமத்துக்கு தரும் அளவுக்கான நீர் விரயமாகிறது. குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் விநியோகத்தை நம்பி அன்னூர் வழி தொடங்கி கருவலூர் நம்பியாம்பா ளையம், அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் மாந கரம் வரை கிட்டதட்ட 14 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் ஆற்று நீர்யேற்றத்தை படிகாரமிட்டு சுத்திகரித்து 33 சதவீதம் குளோரின் கலந்த வாயு வைப் பாய்ச்சி பாக்டீரியா ஒழிப்பு செய்து கடைசி பொது/வீட்டு குழாய் இணைப்பில் 0.2 பிபிஎம் குளோரின் நிலை கொள்ள கலங்கல் இல்லாத குடிநீரை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சாலை விபத்தில் முதியவர் பலி
தாராபுரம்,ஜூன் 15 - தாராபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முதிய வர் பரிதாபமாக பலியானார். தாராபுரம் அருகே உள்ள கருப்பராயன் வலசு பகு தியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் சம்ப வத்தன்று செலாம்பாளையம் அருகே உள்ள பெட் ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது உடுமலைபேட்டை யில் இருந்து தாராபுரம் நோக்கி வேகமாக வந்த கார் பலமாக இவர் மீது மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடிபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன்(38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடம் மே மாதம் நிறைவடையும்: அமைச்சர்
திருப்பூர், ஜூன் 15 - 2023 மே மாதத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடையும் என மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் கூறினார். திருப்பூரில் பின்னலாடை தொழிலில் பல லட்சம் தொழி லாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் மாநகர் பகுதிக ளில் இரு இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் இஎஸ்ஐ மருத்துவமனை இல்லாத தால் மேல் சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைக்கு தொழிலா ளர்கள் கோவை மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகை யிலும், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையிலும் திருப் பூர் பூலுவப்பட்டி சுற்றுச் சாலையில் செட்டிபாளையம் பகுதி யில் 7.46 ஏக்கரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக் கல் நாட்டப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.75 கோடி நிதி யும் ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டுமான பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் புதன் கிழமை ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமான பொருட்களின் தரம் போன்றவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மேலும், பணியை விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இதன் பின்னர் தொழிலாளர் நல அமைச்சர் சி.வி. கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் ரூ.75 கோடி மதிப்பில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற பிரச்னைகள் காரணமாக நீண்ட காலமாக இந்த பணிகள் தொடங்கப்படா மல் இருந்தது. முதல்வரின் நடவடிக்கையால் தற்போது பணிகள் தொடர்ந்து நடக்கிறது. வரும் மே மாதம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடையும். இந்த மருத்துவமனை மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர் கள் பயன் பெறுவர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அதிகளவு பயனடைவார்கள். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வகையில் இந்த மருத்துவ மனை அமைக்கப்பட்டு வருகிறது, என்றார். தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட் சியர் வினீத், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க. செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி மற்றும் இஎஸ்ஐ கோவை மண்டல இயக்குனர் ரகுராமன், திருப்பூர் கிளை மேலாளர் திலீப், அலுவலக உதவியாளர் நடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.