அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் பெற கூடுதல் கட்டணம்
நடவடிக்கை எடுக்க சிபிஎம் புகார்
உடுமலை, ஜூலை 2- பிறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவில் முறைகேடுகளில் ஈடுபடும் நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் நகராட்சி ஆணை யரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலை அரசு மருத்துவமனைக்கு, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பிரசவம் பார்க்க அதிகளவில் கர்ப்பிணி பெண்கள் வரு கின்றனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் வாங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் விண்ணப்பம் பெற ரூ.2, சான்றிதழ் பெற ரூ.10ம் நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் இந்த பிரிவில் பணியாற்றும் நகராட்சி ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50ம், சான்றிதழ் பெறுவதற்கு ரூ.200ம் வசூலிக்கின்றனர். இதனால் கிராமப்பகுதியை சேர்ந்த ஏழைகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் வெளியூரை சேர்ந்தவர் என்றால் தனியாக கட்டணமும் வசூலிக்கின்றனர். எனவே நகராட்சி விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இம் மனுவை உடுமலை நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மது சூதனன், நகரக்குழு உறுப்பினர் தண்டபாணி மற்றும் கிளை செயலாளர் கனகராஜ் ஆகியோர் நகராட்சி ஆணையாளரிடம் அளித்தனர்.
தாராபுரத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
தாராபுரம், ஜூலை 2 - தாராபுரம் நகராட்சி சார்பில் 107 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டங்களில் வளர்த்து வரும் ஆடு களை நாய்கள்a கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்ற வருகிறது. இதில் நாய்கள் கடித்ததில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 400 ஆடுகள் இறந்துள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தாராபுரம் நகராட்சி ஆணையர் உத்தர வின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகா தார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தெருநாய்களை பிடித்து நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள சுகாதார பிரிவு கட்டிடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு திருநெல் வேலியில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் குழு 107 நாய் களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய் யப்பட்டது. மேலும் சுமார் 600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை
தாராபுரம், ஜூலை 2- தாராபுரத்தில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் காமராஜபுரம் 2 வது வார்டு பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே உடனடியாக மின்வாரியத்தினர் பழைய கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.