tamilnadu

img

கோழி பண்ணைக்கு ரேசன் அரிசி கடத்தல்: லாரியோடு இருவர் பிடிபட்டனர்

சேலம், செப்.29- கோழி பண்ணைக்காக ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி இருவரை பொதுமக்கள் ஞாயிறன்று பிடித்தனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பகுதி வழியாக மினி லாரியில் ரேசன்  அரிசி கடத்தி வருவதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆட்டையாம்பட்டி பகுதி அருகே உள்ள வீரகாரன் கோயில் பகுதியில் மினி லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தகவல் கொடுத் தனர். அதனைத்தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி தியாகராஜன் சம்பவ இடத்திற்கு வந்து உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பின்பு அதிகாரிகள் நேரில் வந்து மினி லாரியில் இருந்த 29 மூட்டை 1.5 டன் அரிசியை சோதனையிட்டனர். இதையடுத்து மினி லாரி ஓட்டுனர் நாமக்கல் மாவட்டம்,  மல்லசமுத்திரம் மாம ரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலைமுத்து  மகன் சின்ராஜ் (25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் பிரபாகரன் (30) ஆகியோரும் ரேசன் அரிசியை கடத்தி வந்தது உறுதி  செய்யப்பட்டது. பின்னர் அங்கி ருந்து மினி லாரி ரேசன் அரிசி ஆகிய வற்றை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை  மேற் கொண்டனர்.   விசாரணையில் நாமக்கல் மாவட்ட  பிரபல தொழிலதிபர் நடத்தி வரும்  கோழிப்பண்ணைக்காக, சின்னப்பம் பட்டி பகுதியில் இருந்து ரேசன் கடை களில் அரிசி கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ரேசன் அரிசி கடத்திய வந்த மினி லாரியின் வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி போலி எண்ணை எழுதிக் கொண்டு கடத்தலுக்கு பயன் படுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எந்தெந்த கடைகளில்  ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வரு கிறது என அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த  ரேசன் கடத்தலில் சில அதிகாரி களுக்கு தொடர்பு உள்ளதாகவும்  தெரி வித்தனர்.