tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புக் கருத்தரங்கம்

திருப்பூர், டிச. 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன் னிட்டு செவ்வாயன்று திருப்பூரில் சிறப்புக் கருத் தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடை பெற்ற இக்கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் வர வேற்றார். இதில் மாற்றுப் பாதையில் மாற்றுத்திறனாளி என்ற தலைப்பில் ஈரோடு பா.மாரிமுத்து, உலக தினத்தில் தமிழகத்தின் நிலை என்பது பற்றி மாற் றுத்திறனாளிகள் சங்க மாநிலத் துணைத் தலை வர் பி.பாரதி அண்ணா ஆகியோர் உரையாற்றி னர். தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணே சன், கே.ஜெ.புரமோட்டர்ஸ் பிரபாகரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் மாலினி, ஆனந்தன், வர்க்கீஸ், ரமேஷ், கோபால், ரோஸி உள்பட பெருந்திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டப் பொருளா ளர் ஆர்.காளியப்பன் நன்றி கூறினார்.

;