tamilnadu

img

“எல்ஐசியின் அடுத்தகட்ட பாய்ச்சலும், பாய்மரமாய் முகவர்களும்”: சிறப்புக் கருத்தரங்கம்!

“எல்ஐசியின் அடுத்தகட்ட பாய்ச்சலும், பாய்மரமாய் முகவர்களும்” என்ற தலைப்பில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழனன்று (செப். 19) சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா தலைமை தாங்கினார். 
சென்னை கோட்டம் 2இன் வணிக மேலாளர் ஆர்.சங்கரநாராயணன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார். “எல்ஐசி முன்னெடுக்கும் தகவல் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் சிஎம் கிளப் மெம்பர் எஸ்.வனமாலி, இசட்எம் கிளப் மெம்பர் பி.ராஜேஷ் ஆகியோர் பேசினர். 
“எல்ஐசி-யின் வளர்ச்சியே முகவர்களின் வளர்ச்சி” என்ற தலைப்பில் சிஎம் கிளப் மெம்பர் எஸ்.ஏ.கலாம் பேசினார். தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகிராமன் கருத்தரங்கை நிறைவு செய்து பேசினார். 
எல்ஐசி கொண்டு வந்துள்ள புதிய பாலிசிகள் மற்றும் திட்டங்கள், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பங்கள், எல்ஐசியின் வளர்ச்சி மற்றும் முகவர்களின் வளர்ச்சி குறித்து கருத்துரையாளர்கள் எடுத்துரைத்தனர். முன்னதாக தலைவர் கே.மனோகரன் வரவேற்றார். பொருளாளர் பி.எம்.ரமேஷ் நன்றி கூறினார். இதில் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.