கோவை, அக்.21 – கோவையில் திருநங்கை ஒருவர் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைக்கப்பட்டி ருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியி ருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திரு நங்கை சங்கீதா (60). கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் திருநங்கைகள் நல வாரியத்தை தொடங்கி திருநங்கைகளின் வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக பணி யாற்றி வந்தார். சாலையோர உணவு விடுதி கள், கடைகள் என திருநங்கைகள் மேம்பாட் டிற்கு பல்வேறு உதவிகள் செய்து வந்த இவர் சமீபத்தில் வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிட்சன் என்ற உணவு விடுதியை சக உறுப்பி னர்களுடன் துவங்கினார். இந்த உணவ கத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், அவர் வசித்து வந்த வீட்டி லிருந்து பெரும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் சாய்பாபா காலனி போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப் போது, சங்கீதா வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் டிரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதை திறந்து பார்த்தபோது அதனுள் அழு கிய நிலையில் சங்கீதா இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன. முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களாகி இருக்கலாம் எனவும், அவரைக் கொன்று பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்து மர்ம நபர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிக ளுக்கு நடுவே அழுகிய நிலையில் திரு நங்கை சங்கீதா சடலம் மீட்கப்பட்ட சம்ப வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.