tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனைக்கு   அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர கோரிக்கை

திருப்பூர், அக். 25 – ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கோரி யுள்ளார். கடந்த 22ஆம் தேதி திருப்பூர் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் ஆர்.குமார் அளித்த மனுவில் கூறியிருப் ்பதாவது:  ஊத்துக்குளி தாலுகா அரசு மருத்துமனை அங் குள்ள அய்யம்பாளையத்தில் செயல்பட்டு வருகி றது. தினமும் 400-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், கணிசமான உள் நோயாளி களாகவும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது புதிய கட்டிடத்தில் போர்வெல் (உப்பு) குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றுக்குடிநீர் இணைப்பு பழைய கட்டிடம் வரை மட்டுமே உள்ளது. சுமார் 200 மீட்டர் குழாய் நீட்டிப்பு செய்து, நீரேற்று தொட்டி கட்டினால் மட்டுமே புதிய கட்டிடத்திற்கு ஆற்றுக்குடிநீர் ஏற்றி வழங்க முடியும். அத்துடன் ஊத்துக்குளி பேரூராட்சி வழங்கியுள்ள ஒரு இணைப்பு என்ற அளவிலான தண்ணீர் விநி யோகம் போதுமானதல்ல. அதேபோல் புதிய கட்டி டத்தில் இரண்டு கழிப்பறை மட்டுமே உள்ளது. அதை ஆண்,பெண் இருசாராரும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இம்மருத்துவமனையில் போதுமான மருத்துவர், செவிலியர் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.  எனவே இம்மருத்துவமனைக்கு ஆற்றுக் குடி நீர் சிறப்பு இணைப்பு வழங்கிட ஊத்துக்குளி பேரூ ராட்சிக்கு உத்தரவிட வேண்டும். புதிய கட்டிடத்திற்கு ஆற்றுக்குடிநீர் செல்லும் வகையில் குழாய் நீட்டிப்பு செய்து நீரேற்றி குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். வெளி, உள் நோயாளிகளுக்கு புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும். மருத்துவர், செவிலி யர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என கேட் டுக் கொள்ளப்பட்டது. அத்துடன், ஊத்துக்குளி பேரூராட்சி வார்டு எண்-7இல், ஊத்துக்குளி கிராம ரீ.ச.எண் 220/4பி வாரிக்குளம் மற்றும்  ரீ.ச.எண். 221/9பி,11,12,13 உள்ள குட்டைகளை தூர்வாரி முழுக் கொள்ளளவு மழைநீர் தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குமார் கேட்டுக் கொண்டார்.

தீபாவளி சிறப்பு போக்குவரத்து கண்காணிப்புக்குழு தொலைபேசி எண்கள் வெளியீடு

திருப்பூர், அக். 25- தீபாவளி பண்டிகையையொட்டி பொது போக்கு வரத்தை கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளிலிருந்து தீபாவளிக்கு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல ஏதுவாக 24ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் - சென்னை மார்க்கத்திலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து  திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மார்க்கங்களுக்கும் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள தனியார் திடலில் தற்காலிகமாக ஏற் படுத்தப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து கரூர் மற்றும் திருச்சி மார்க்கங்களுக்கும் கூடுதலாக அரசு சிறப்பு பேருந்துகள் நாள் முழுவதும் இயக்க மாவட்ட நிர்வாகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   திருப்பூரிலிருந்து பிற மாவட்டங்களுக்கு (சென்னை, இராமேஸ்வரம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, செங்கோட்டை போன்ற முக்கிய ஊர்களுக்கு) செல்ல www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகள் உரிய நேரத்திற்கு இயக்கப்படுவதையும், பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பேருந்துகளில் செல்வதையும் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் சிரமமில்லாத பயணத்திற்கு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) – 9442110877, உதவி மேலாளர் (இயக்கம்)- 8825990791, துணை மேலாளர் (தொழில்நுட்பம்)- 9442114877, பழைய பேருந்து நிலைய பொறுப்பாளர் (உதவி பொறியா ளர்) – 9487898541, புதிய பேருந்து நிலைய பொறுப்பாளர் (உதவி மேலாளர்) – 9942604454 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவ லகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க புதிய தொழில்நுட்பம் வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்

உடுமலை, அக். 25- வறட்சி காலங்களில் தீவனப் பற்றாக் குறையை சமாளிக்க புதிய தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்கத்தை அழகுமலை பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் அளித்தனர். கோவை வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர்கள் பொங்கலூர் பகுதி யில் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அழகுமலை பகுதி யையொட்டிய ராமம்பாளையம் கிராமத் தில் வெள்ளியன்று ஹைட்ரோபோனிக்ஸ் தீவனத்தை பற்றிய செயல்முறை விளக் கம் அளித்தனர். இதில் விதைகளை தேவை யற்ற குப்பை கூழங்களிலிருந்து பிரித்து எடுத்து நீரில் கழுவி 24 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரினை வடித்து ஈரக் கோணிப் பையில் 24மணி நேரம் கட்டி வைப்பதன் மூலம் முளைப்பை தூண்டலாம். பிறகு செவ் வக வடிவிலான பிளாஸ்டிக் தொட்டியில் பரப்பி 5நாட்கள் வளரும் வரை நாளுக்கு இருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனை ஏழு முதல் எட்டு நாட்கள் நிழலில் வளர்த்து கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். இத்தொழில்நுட்பமானது தீவன உற் பத்தி செலவைக் குறைக்கிறது. இந்த தீவ னத்தை தொடர்ந்து அளிப்பதன் மூலம் பாலில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் எஸ்என்எப் (SNF) அதிகரிக்கிறது. மேலும் கால்நடை சினை பிடிக்கும் தன்மை அதிகரிக்கும். ஆடுகளுக்கு இதனை அளிப் பதன் மூலம் குறைந்த நாளில் மிகுந்த எடையை எட்டும் எனக்கூறினர்.