மரக்கன்று நடும் விழா
அவிநாசி, ஜூலை 23- அவிநாசி பேரூராட்சி சார்பில் பொதுப் பயன் பாட்டு இடங்களான ரிசர்வ் சைட்களில்மரக் கன்று நட்டு பராமரிக்கும் திட்டம் செவ்வாயன்று துவங்கியது. அவிநாசி பேரூராட்சி சார்பில் மழை வளம் பெருக்க, மரம் வளர்ப்பை ஊக்குவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்மத்திய அரசு சார்பில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பையும் ஊக்கு விக்கும் வகையில் அவி நாசி பேரூராட்சி நிர் வாகம் சார்பில் ரிசர்வ் சைட்களில், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் செவ்வாயன்றுதுவங்கியது. அவிநாசி நியூடவுன் பகுதியில் உள்ள ரிசர்வ் சைட் நிலத்தில், மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியை செயல் அலுவலர் ஈஸ்வர மூர்த்தி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். இதில் 31 வகையைச் சேர்ந்த 200 மரக்கன்று நடப்பட்டன.
திருப்பூர் மாவட்ட கிராமங்களில் தொடர்கதையாக பல லட்சம் மதிப்பிலான மின் கேபிள்கள் திருட்டு
விவசாயிகள் வேதனையை அலட்சியப்படுத்தும் காவல் துறை
திருப்பூர், ஜூலை 23 - திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு கிராமப்புற பகுதிகளில் விவ சாயத் தோட்டங்களில் வைக்கப் பட்டிருக்கும் மின் மோட்டாருக் கான கேபிள்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. பல லட்சம் மதிப்பிலான மின் கேபிள்கள் திருட்டுப் போய்க் கொண்டிருந் தாலும், விவசாயிகள் வேதனையை மாவட்ட காவல் துறை கண்டுகொள் ளாமல் அலட்சியப்படுத்துகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அவி நாசி ஒன்றியம் சேவூர் சுற்று வட்டார கிராமங்களிலும், பொங்கலூர் ஒன்றியம் அவிநாசிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயத் தோட்டங்களில் நீரேற்றம் செய்வதற்காக வைத் துள்ள மின் மோட்டார்களின் மின் கேபிள்கள் திருட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. இது குறித்து விவசாயிகள் காவல் நிலையங் களுக்குச் சென்று புகார் கொடுத் தால் புகாரைப் பதிவு செய்து கொள்ள மறுக்கின்றனர். அத்துடன் மின் கேபிள்களைப் பறிகொடுத்த விவசாயிகளிடம் நீங்கள் பாது காப்பாக வைத்துக் கொள்ள வேண் டியதுதானே? என்று எதிர்க்கேள்வி கேட்பதும், தேவையில்லாத கேள்வி களை அடுக்கடுக்காக கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆட்படுத்துவதும் காவலர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும்,காவல் நிலையத் தில் கிடைக்கும் அவமரியாதை யை நினைத்தே பல விவசாயிகள் புகார் கொடுக்கச் செல்லாமல் விட்டு விடுகின்றனர். ஓரிரு விவசா யிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன் மீதும் முறையாக வழக்குப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தெற்கு அவிநாசி பாளையம் கவுண்டன்புதூர், செங்காட்டுப் பாளையத்தில் வசிக் கும் விவசாயிகள் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு மொத்தமாக வந்து புகார் அளித்த னர். இதில் கடந்த ஜூன் 20, ஜூலை 10, 11, 22 ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக பல விவசாயத் தோட்டங்களில் உள்ள மின் கேபிள்கள் திருட்டுப் போயுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும். ஆனால் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தொடர் திருட்டு சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங் கவும், தொடர் திருட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவிநாசி, பொங்கலூர் வட்டா ரங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் வேறு பல கிராமப்பகுதிகளிலும் இது போல் மின் கேபிள் திருட்டுகள் தொடர் கதையாக இருக்கின்றன. எனவே இது குறித்து மாவட்ட நிர் வாகம் உரிய கவனம் செலுத்தி குற்றத்தைத் தடுக்கவும், விவசாய பொருட்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்துகின்றனர்.