கோவையில் சிறப்பு நீதிமன்றம் திறப்பு
கோவை, டிச. 18 – குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக கோவையில் சிறப்பு நீதிமன்றம் புதனன்று திறந்து வைக் கப்பட்டது. பாலியல் வன்முறையிலிருந்து குழந்தை களைப் பாதுகாக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் தோழமை நீதிமன்ற அறை ஆகியவை புதனன்று கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத் தார். இந்த நிகழ்வின் போது, கோவை நீதி மன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற களின் நீதிபதிகள் வழக்கறிஞர்கள், தமிழ் நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வா கிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.