tamilnadu

img

திருப்பூர் கோட்ட சாலைப் பணியாளர் சங்கப் பேரவை

திருப்பூர், நவ. 20 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத் தின் திருப்பூர் கோட்ட 4ஆவது பேரவை அண்மையில் நடை பெற்றது. திருப்பூர் அரிமா சங்க வளாகத் தில் நடைபெற்ற இப்பேரவைக்கு கோட்டத் தலைவர் என்.சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அம்மாசை வரவேற்றார். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பி ரமணியன் பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். கோட்டச் செய லாளர் ஆர்.இராமன் அறிக்கையை சமர்ப்பித்தார். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க மாநில உதவிச் செயலா ளர் எஸ்.சுப்பிரமணியம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.நாகராஜன், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைத் துணைத் தலைவர் பீ.மகேந்திர பூபதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

தீர்மானங்கள் 

இப்பேரவையில் சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித் திட ஆணை வழங்கவேண்டும், தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதி யம் வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும். நவ. 25 ஆம் தேதி யன்றுதிருப்பூர் மண்டலம் கண்கா ணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் இயக்கத்தை வெற்றி பெறச்செய்வது என முடிவு செய்யப்பட்டது. இப்பேரவையில் கோட்ட சாலைப் பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநிலப் பொதுச் செய லாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாநில செயற் குழு உறுப்பினர் எம்.மணிவேல் நன்றி கூறினார்.