மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு நகரக் குழு செயலாளராக இருந்து மறைந்த தோழர் டி.பெருமாள் சாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினை வேந்தல் வெள்ளியன்று கட்சியின் தெற்கு நகர குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா மற்றும் தெற்கு நகரக் குழு செயலாளர் நாகேந்திரன், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பெருமாள்சாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.