கோவை, ஆக. 20- மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றிய மசோ தாவில் தங்களுக்கு திருப்தி இல்லை என சகோதரி அறக்கட்டளை அமைப் பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் வலியுறுத்தினார். சகோதரி அறக்கட்டளை அமைப் பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் கோவை பத்திரிகையாளர் மன்றத் தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவையில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றது. இறுதியாக வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை கோவையில் பிரம்மாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடத்தப்படுகி றது. இந்தப் பேரணியில் ஒரு பாலீர்ப்பு கொண்டோர், இரு பாலீர்ப்பு கொண் டோர், திருநங்கைகள், திருநம்பிகள் என கேரளா, பெங்களூரு, பாண்டிச் சேரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற் கின்றனர். இந்தப் பேரணியின் நிறை வில் திருநங்கைகள் முன்னேற்றத் திற்குப் பாடுபட்டவர்கள் கெளரவப் படுத்தபட உள்ளனர். மேலும், நாட்டில் எல்லோருக்கும் வாழவும், காதல் செய்யவும், அன்பு செலுத்தவும் உரிமை உண்டு. ஒரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், இரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன், மகிழ்வி போன்ற வர்களின் காதல் சிறுமைப்படுத்தப் படுகின்றது. மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாகவும், ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிமைகள் குறித்து விளக்கவும், கோரிக்கைகளை அரசி டம் கொண்டு செல்லவும் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது. இந்தப் பேரணியில் 7 வண்ண உடைகள் உடுத்தி கொடிகள், பதாகை களுடன் பங்கேற்க இருக்கின்றோம். குற்றம் சாட்டும் சமூகமே தங்களை சிதைக்கிறது. நல்ல சமூகம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. பெற்றோரால் தான் மூன்றாம் பாலி னத்தவர் வேறு வழியின்றி பாலியல் தொழிலிலும், பிச்சையும் எடுக்கின்ற னர். மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் சமீபத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதா தங்களுக்கு திருப்தியானதாக இல்லை. மூன்றாம் பாலினத்தவரை வன்புணர்வு அல்லது வன்கொடுமை செய்தால் 2 ஆண்டு தண்டனை என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும் என கோவையில் நடக் கும் சுயமரியாதை பேரணியில் வலியு றுத்துவோம். பெண்ணிற்கு வன் கொடுமை நடக்கும் போது வன்பு ணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுவதைப் போல், மூன்றாம் பாலினத்தவர்களை வன்கொடுமை செய்தால் தண்ட னைக் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது திருநங்கை மேடை கலைஞர் பிரேமா, கோயமுத்தூர் 1 அமைப்பு உறுப்பினர் அருண் பாலகிருஷ்ணன், மருத்துவர் சாகுல் ஹமீது, ரோட்டரி ஆக்ருதி மகளிர் சங்க தலைவி அங்க யற்கண்ணி, செயலாளர் கவிதா கோபாலகிருஷ்ணன், திட்ட மேலாளர் ஹேமா புருஷோத்தமன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.